பிப்ரவரி 13இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
பிப்ரவரி 13ம் தேதி உதகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் அறிவித்து உள்ளார். இது நடைபெறும் இடம், நேரம் மற்றும் கல்வித்தகுதி குறித்தும் அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் வேலையிழந்த நிலையில், தமிழகத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வாரந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி உதகையில் நடைபெற உள்ள முகாம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, உதகை அரசினர் கலைக்கல்லூரியில் வரும் பிப்ரவரி 13ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
இம்முகாம் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி மையங்கள் கலந்து கொள்ள உள்ளன. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர் வரை பங்கேற்கலாம். இதன் மூலம் தனியார் வேலைவாய்ப்பு பெறுபவரின், அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வேலைவாய்ப்பற்றோர்க்கு வழங்கப்படும் உதவித்தொகையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 814 கணினி ஆசிரியர் பணியிட தேர்வு முறைகேடு – ஐகோர்ட் விசாரணைக்கு உத்தரவு!!
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதள பக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய 044-2444004 என்ற எண்ணில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்