தமிழகத்தில் 814 கணினி ஆசிரியர் பணியிட தேர்வு முறைகேடு – ஐகோர்ட் விசாரணைக்கு உத்தரவு!!
தமிழகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
தேர்வு முறைகேடு:
2019இல் நடந்த கணினி ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், 814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வில் மொபைல் போன்கள் அனுமதிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் தஞ்சாவூர், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவில் மேற்குறிப்பிட்ட 3 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கணினி ஆசிரியர் பணிக்கு 742 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய விசாரணை அறிக்கையை ஆராய்ந்த பிறகு தீர்ப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு – மாதச் சம்பளம் அதிகரிப்பு!!
அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளது. இந்த விசாரணையில் தேர்வறைகளின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலோ அல்லது தேர்வர்களை நேரில் வரவழைத்தோ விசாரணை நடத்தலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்