ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.
எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளானது ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. தமிழகத்தின் மெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த ஆன்லைன் வகுப்பு முறையினை மேற்கொணடனர். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளும் தங்களின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே அதனை செயல்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்பின் பொது ஆபாச விடீயோக்கள் வருவதாக பெற்றோர்கள் உயர்நீதிமனறத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் பாதுகாப்பான ஆன்லைன் வகுப்புகளுக்கு என்ன வழிமுறைகள் உள்ளன என்பதனை குறித்து ஆராய்ந்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |