செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் – பல்கலை அறிவிப்பு

0
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் - பல்கலை அறிவிப்பு
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் - பல்கலை அறிவிப்பு

செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் – பல்கலை அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.

தற்போது இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த இந்திய பார் கவுன்சில் திட்டமிட்டுள்ளது. அதாவது 3 ஆம் ஆண்டு மற்றும் 5 ஆம் ஆண்டு சட்டக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கடைசி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது.

இது இந்திய பார் கவுன்சில் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மே 24 ஆம் தேதி பார் கவுன்சில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவையாவன,

  • 3 ஆம் ஆண்டு மற்றும் 5 ஆம் ஆண்டு சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள் கடைசி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எழுத வேண்டும்.
  • இந்த தேர்வினை எழுத முடியாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அந்தந்த கல்லூரிகள் செய்ய வேண்டும்.
  • 1 மற்றும் 2 ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இன்டெர்னல் மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி வழங்கப்படும்.
  • இந்த தேர்வுகள் யாவும் முடிந்த பின்னர் அடுத்த 1 மாதத்திற்குள் கல்லூரிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!