ஒரு வாரம் பள்ளி மூடல் – 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று!
சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு கொரோனா:
தமிழகத்தில் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பரவல் குறைந்துள்ள இந்த நேரத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தஞ்சை மாவட்டத்தில் அரசு கல்லூரியில் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவி இருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
WhatsApp செயலியில் Profile & Online வசதியை மறைக்கும் அம்சம் – புதிய அறிமுகம்!
மேலும் கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் கொரோனா பரவி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பு பணியாக தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்த வகுப்பறைகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு 2021 ஒத்திவைப்பு? மத்திய அரசுக்கு கோரிக்கை!
அதனை தொடர்ந்து தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் பள்ளி 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அந்த தனியார் பள்ளிக்கு ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை மூட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.