நீட் தேர்வு 2021 ஒத்திவைப்பு? மத்திய அரசுக்கு கோரிக்கை!
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு நாட்டில் கொரோனா தாக்கம் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக நீட் தேர்வு நடத்தப்படுவது பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் கலந்தாலோசித்து நீட் தேர்வை நடத்த திட்டமிட்டது. அதன்படி ஜூலை 13ம் தேதி நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பள்ளிகளுக்கு சீல் – அமைச்சர் அறிவிப்பு!
செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்தது அப்போது நீட் தேர்வை தள்ளி வைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தேர்வு நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!
அதே நேரத்தில் நீட் தேர்வு நடைபெறும் நாளன்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறவுள்ளது. எனவே நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருக்க கூடாது, அவர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.