தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணம் திடீர் உயர்வு – அல்லல்படும் மக்கள்! பண்டிகை எதிரொலி!

0
தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணம் திடீர் உயர்வு - அல்லல்படும் மக்கள்! பண்டிகை எதிரொலி!
தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணம் திடீர் உயர்வு - அல்லல்படும் மக்கள்! பண்டிகை எதிரொலி!
தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணம் திடீர் உயர்வு – அல்லல்படும் மக்கள்! பண்டிகை எதிரொலி!

தமிழகத்தில் நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆம்னி பஸ்களின் கட்டணம் திடீர் உயர்வை சந்தித்துள்ளது. கூடுதல் எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் அதையும் மீறி அளவில் மக்களின் கூட்டம் உள்ளது.

ஆம்னி பஸ் கட்டணம்:

அரசு முக்கிய நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் போன்ற தினங்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளையும், கூடுதல் ரயில்களையும் இயக்கி வருகிறது. ஆனால் மக்களின் கூட்டம் அதைவிட அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளில் மக்கள் பயணக்க வேண்டிய நிலை உள்ளது. மக்களின் அவசர தேவையை தெரிந்து கொண்ட தனியார் நிறுவனங்கள் ஆம்னி பஸ்களுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிக கட்டணத்தை வசூலித்து வருகிறது.

பான் -ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லையா? அப்போ இதை செக் பண்ணுங்க.. விவரங்கள் உள்ளே!

இது தொடர்பாக தமிழக அரசு பலமுறை எச்சரித்துள்ள நிலையில் தற்போது நாளை மறுநாள், அதாவது ஜூன் 29ஆம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வியாழக்கிழமை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிப்படையும் நிலை உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!