ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்? அதிபர் விளக்கம்!
அமெரிக்காவில் தொடர்ந்து ஓமைக்ரான் பரவல் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கும் எண்ணம் இல்லை என்றும், அது மிகவும் பின்னோக்கிய செயல் என்றும் அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.
ஓமைக்ரான் பரவல்:
கொரோனா தொற்றின் பாதிப்பு உலக நாடுகளை முழுமையாக அச்சுறுத்தி வந்த நிலையில், பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் கொரோனா முதல், இரண்டாம் அலை என்று தொடர்ந்து வந்த அச்சுறுத்தல்கள் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் மக்களின் அலட்சிய போக்கினால் பரவத் தொடங்கியது. ஆனால் மற்ற நாடுகள் தீவிர கட்டுப்பாடுகளினால் 3ம் அலை பாதிப்புகளை தவிர்த்தது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று பரவ தொடங்கியது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஓமைக்ரான் தொற்று ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவி வருகிறது. அங்கு பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யபட்டு வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், பரவி வரும் ஓமைக்ரான் தொற்றின் பாதிப்பினால் மக்கள் பதட்டம் அடைய தேவையில்லை. ஆனால் நோய் தொற்று குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சர் தகவல்!
கொரோனா பரவலை தடுக்கவும் வகையில் மக்கள் அனைவரும் முறையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோய் குறித்து கடந்த 2020 மார்ச் மாதத்தை விட தற்போது நமக்கு அதிக அளவில் தெரியும். இதனால் நோய் பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது நாம் பின்னோக்கி செல்வது போலாகும். அதனால் கடந்த ஆண்டை போல் பள்ளிகளை மூடி, குழந்தைகளின் கல்வி நிலையை கேள்விக் குறி ஆக்காமல், தற்போது பள்ளிகளை திறக்க உள்ள பல வழிகளையும் குறித்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவில் ஊரடங்கு விதிக்க வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகிறது.