தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

விருதுநகர் மாவட்டதில் கிராமிய அஞ்சல் கோட்டத்தில் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விருதுநகா் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளார்.

காப்பீடு முகவர்:

அஞ்சல் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அஞ்சலத்தில் பொன்மகள் சேமிப்பு திட்டம், வருங்கால வைப்பு நிதி திட்டம், காப்பீடு திட்டம் போன்ற வைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டங்களாக உள்ளதால் அஞ்சலகத்தில் கணக்கு தொடங்குவோரின் எணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சர் தகவல்!

அந்த வகையில் மாவட்டம் தோறும் அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்ப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலத்திற்கு காப்பீட்டு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு வேலையில்லாதோர், சுயதொழில் செய்பவர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், போன்றோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 6, 7 & 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு கால அட்டவணை!

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட அஞ்சல்களில் இருந்து பெற்று விண்ணப்பிக்கலாம். இப்பணியில் சேர விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் 2 புகைப்படம், பான் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்விச்சான்று ஆகியவைகளை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர், விருதுநகர் என்ற முகவரிக்கு டிசம்பர் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!