மாதம் ரூ.1,00,000/- ஊதியத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரம் இதோ!
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பாக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, சவுதி அரேபிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Overseas Manpower Corporation Limited Ramanathapuram (OMCl Ramanathapuram) |
பணியின் பெயர் | Staff Nurse |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
OMCl Ramanathapuram காலிப்பணியிடங்கள்:
செவிலியர் (Staff Nurse) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Staff Nurse கல்வி தகுதி:
குறைந்தபட்சம் இரண்டு வருடபணி அனுபவத்துடன் B.Sc Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
21 முதல் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
மேற்படி பணியாளர்களுக்கு ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை சம்பளம், உணவுப்படி, இருப்பிடம், விமானப்பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்போரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NSIC -யில் Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – 80+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.2,20,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்படி பணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 05.09.2023 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் பதிவு முகாம் நடைபெறுகிறது. எனவே இராமநாதபுரம் மாவட்டத்தினைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உடைய B.Sc Nursing படித்த மகளிர் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்படிவத்தை [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.