மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் – மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை!
மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் பழைய திட்டத்தில் உள்ள எந்த பண பலன்களும் வழங்கப்படவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தற்போது வரை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (ஜூலை.05) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? ஏரியா லிஸ்ட் இதோ!
இதனை கருத்தில் கொண்டு தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மின் வாரிய ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அம்மாநில மின் வாரியம் சார்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.