தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி அக்.9 மாபெரும் போரட்டம் – ஊழியர்கள் முடிவு!
தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பழைய பென்ஷன் திட்டம்:
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பழைய ஓய்வூதியம் குறித்த எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. இந்நிலையில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும், திமுக அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 100% வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என அறிவிப்பது ஏன் என ஊழியர்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில், பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,000 சம்பள உயர்வு – கோரிக்கையை நிறைவேற்ற அரசு முடிவு!
அதற்காக அக்டோபர் 9ம் தேதி திங்கள்கிழமை மதியம் முதல் மாலை நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்ட அலுவலகங்களில் நடைபெறும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் கட்டாயமாக கலந்து கொண்டு தங்களுக்கான உரிமையை கேட்க வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பிறகாவது அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் அமலாகுமா என ஊழியர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.