ஆப்லைன் பணபரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ. 500 ஆக உயர்வு – RBI அறிவிப்பு!
இந்தியாவில் ஆப்லைன் முறையிலான பண பரிவர்த்தனை உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்லைன் பண பரிவர்த்தனை:
இந்தியாவில் சிறிய மதிப்பிலான பண பரிவர்த்தனை வேகத்தை அதிகரிக்கவும் பண பரிவர்த்தனையில் போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும் இணைய வசதி குறைந்த பகுதிகளிலும் UPI லைட் வாலட் என்ற திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஆஃப்லைன் வாயிலாக குறிப்பிட்ட தொகையை பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கபடுகிறது. தற்போது இத்திட்டத்தால் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு!
இந்த முறையில் இதுவரை ரூ.200 மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் கட்டண பரிவர்த்தனை உச்ச வரம்பை உயர்த்த மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து பண பரிவர்த்தனை வரம்பு தற்போது ரூ.200 – ல் இருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் UPI லைட் வாலட் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.