தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (TNPSC) செயலாளர் நியமனம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TNPSC செயலாளர் நியமனம் :
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த புதிய அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அரசு பொறுப்புகளுக்கான ஆட்சிப்பணி அதிகாரிகளைத் தொடர்ச்சியாக பணியிடமாற்றம் செய்து வருகிறது. சமீபத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியாளர்களை நியமித்தது. பல துறைகளில் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 21க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் – வெளியான தகவல்கள்!
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்தது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சி பொறுப்பிலிருந்து கொரோனா தடுப்பு பணியின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்சியராக உள்ளவர்களுக்கு கூடுதல் நிர்வாக பொறுப்புகள் வழங்கப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டும் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி – கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு!
மேலும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுபாட்டாளராக சுதன் ஐ.ஏ.எஸ்., சமக்ர சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., -ஐ தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது துணைச் செயலாளர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., பொறுப்பில் இருப்பார் என தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.