5000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி – கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு!

0
5000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி - கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு!
5000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி - கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு!
5000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி – கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து, மூன்றாம் அலை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் நிலையை சமாளிக்க டெல்லி அரசு 5000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி :

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நோய் தீவிரம் அதிகரித்து மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். உயர்ந்தது வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. நோயாளிகள் படுக்க படுக்கை வசதிகள் இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு ஒரு முறை 4000 உயிர்கள் பறி போனது. ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்தங்களை இழந்து தவித்தனர்.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மதிப்பெண் பட்டியல் – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் , செவிலியர்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவில் வட மாநிலங்களை சேர்ந்த மக்கள் கொரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்டனர். தலை நகர் டெல்லி கொரோனா பரவல் மையமாக மாறியது. போதிய ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மூச்சு திணறில் காரணமாக மரணமடைந்தனர். இதனால் தலைநகர் டெல்லி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. அதன் பின்னர் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகள் தீவிரமாக நடைபெற்றது. அதன் விளைவாக ஓரளவு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – அறிவிப்பு வெளியீடு!!

மூன்றாம் அலையை சமாளிக்கும் வகையில் டெல்லி அரசு முன்னெச்சரிக்கையாக 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்கு இரண்டு வாரங்கள் செவிலியர் பயிற்சி மற்றும் உயிர் காக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவிருப்பதாகவும், 12 ம் வகுப்பு முடித்தவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் இந்த பயிற்சிக்கு பெற ஜூன் 17 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான பயிற்சி ஜூன் 28 தொடங்க உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!