புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை – இன்று விண்ணில் பாய்ந்தது!!
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்தது.
புதிய ஏவுகணை திட்டம்:
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) சாரபில் இந்திய ராணுவத்திற்கு தேவையான மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்கள், ஏவுகணைகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் வரிசையில் ரஷியாவுடன் இணைந்து திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை (எஸ்எப்டிஆர்) தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக ஏவுகணைகளை மேம்படுத்துவதை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையானது, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு 4 கட்ட பயிற்சி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
இந்த ஏவுகணைகளில் திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் இந்த சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் பூஸ்டர் மோட்டார் உள்ளிட்ட அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்