இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் ரத்து
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.
அதன் பிறகு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதால் தேர்வு நடத்தப்படுவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற தொடங்கியது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதே போன்று கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கையினை ஏற்று ஒடிசா மாநிலத்தில் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்று உள்ளனர்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |