அக்.25ம் தேதி பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு! பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஹாப்பி!
இந்தியாவில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த கிரகணம் மாலை 4. 29 மணிக்கு தொடங்கி மாலை 5.57 மணிக்கு உச்சம் பெறும் என்று அறிவியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
பூமி மற்றும் சூரியனுக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சந்திரனின் ஒரு பகுதி மட்டும் சூரியனை மறைக்கிறது. நடப்பாண்டு அக்.25ம் தேதி சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. அப்போது சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒன்றுகொன்று 5.1 டிகிரி கோணத்தில் சாய்ந்து இருக்கும் என்று அறிவியலார் கூறுகின்றனர். மேலும் கிரகணத்தின் போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் என்கின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த சூரிய கிரகணம் தெற்கு ஆசியா, ஐரோப்பா,மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, வடக்கு அட்லாண்டிக் ஆகிய பகுதிகளில் நன்றாக தெரியும். அதே போல இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் சூரிய கிரகணம் தெரியும். இந்த கிரணமானது அக்டோபர் 25 அன்று மாலை 4. 29 மணிக்கு தொடங்கி மாலை 5.57 மணிக்கு உச்சம் பெறும். இதனை வெற்று கண்ணால் பார்க்க கூடாது. கண்ணாடி அல்லது தொலைநோக்கிகளை பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக். 25ம் தேதி அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Thiruvannamalai mavattam. Holiday Ella ya