உயர்கல்வி துறையில் தமிழகம் முதலிடம் – புதுமைப்பெண் திட்டத்தின் சாதனை!

0
உயர்கல்வி துறையில் தமிழகம் முதலிடம் - புதுமைப்பெண் திட்டத்தின் சாதனை!

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுமைப்பெண் திட்டம்:

தமிழக அரசு பெண்களின் நலனை மையமாக கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் புதுமைப்பெண் திட்டமும் ஒன்று. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்கும் தமிழக அரசின் சார்பில் புதுமை பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

TNMAWS 1993 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய கேள்விகள் இதோ!!

இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது. இது புதுமை பெண் திட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!