கோடீஸ்வரன் ஆக இப்படி ஒரு வழி இருக்கா? இது தெரியாம போச்சே!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 2024 பட்ஜெட்டின் போது குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதிய கணக்கு மூலம் சேமிக்க உதவும் திட்டம்தான் இது. இதில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து கூட்டுவட்டியின் பலனை அடையலாம். NPS வாத்சல்யாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதார் அட்டை உள்ள 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த கணக்கை தொடங்க முடியும். லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் முடிந்த பிறகு, நீங்கள் 25% தொகையை 3 முறை திரும்பப் பெறலாம்.
ரேஷன் கார்டு இன்னும் வாங்கலையா? எப்படி வாங்கணும் என்பது குறித்த முழு விவரங்களுடன்!
2.5 லட்சத்துக்கும் மேலான தொகையில், 80% தொகையை எடுக்கலாம். மொத்தத் தொகையில் 20% தொகையை ஒரே முறையில் எடுக்கலாம். 2.5 லட்சம் வரை முழுத் தொகையையும் எடுக்கலாம். இறந்தவுடன், முழுத் தொகையும் பாதுகாவலர் பெயருக்கு மாற்றப்படும்.இந்தத் தொகையை 60 ஆண்டுகள் வைத்திருக்கும் பட்சத்தில் 10% ஆண்டு வருமானத்தை சேர்த்து மொத்த கார்ப்பஸ் ரூ.2.75 கோடியில் இருக்கும். 11.59% ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், 60 வயதுக்குள், இந்த கார்பஸ் ரூ.5.97 கோடியாக இருக்கும். அதேபோல், 12.86% ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், 60 வயதில் மொத்த கார்பஸ் ரூ.11.05 கோடியாக இருக்கும்.


























