என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் – சேமிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில் NPS வாத்சல்யா திட்டம் முக்கியமான ஒன்றாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இது பெற்றோர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது. NPS வத்சல்யா என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் இயங்கும் முதலீட்டுத் திட்டம்.
RPF SI விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இது அதிக வருமானத்தை வழங்கும் ஒரு திட்டம் ஆகும். இதில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000, குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 மட்டுமே. லாக்-இன் காலத்திற்குப் பிறகு 25% வரை பகுதியளவு திரும்பப் பெற முடியும். என்பிஎஸ் வாத்சல்யா பிரிவு 80CCD(1B) இன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. அதே சமயம் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.


























