கொரோனா முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் ரயில் நிலையங்களில் அலை மோதுகிறது.
வட மாநில தொழிலாளர்கள்:
தமிழகத்தில் ஏறத்தாழ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், அசாம் போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் தொழிலாளர்கள் குடும்பங்களுடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் தான் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த வருடம் மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். உணவுக்கு கூட வழியில்லாமல் பல குடும்பங்கள் கஷ்டங்களை சந்தித்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொது முடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வட மாநில தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.
ஊட்டி மலை ரயில் சேவை நாளை முதல் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
அதே நேரத்தில் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அதே போல தமிழகத்திலும் வேலை பார்த்து வந்த பல தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். அதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவையிலிருந்து பீகார் செல்லும் தன்பாத் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்து, கோவை ரயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.