ஊட்டி மலை ரயில் சேவை நாளை முதல் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி நீலகிரி சுற்றுலா தலங்களில் செயல்பட்டு வந்த ரயில் சேவை நாளை (21-04-2021) முதல் ரத்து செய்யப்படுகிறது.
ரயில் சேவை ரத்து:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. அதன்படி சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், மால்கள், பூங்காக்கள், உணவகங்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலம் முழுவதும் இன்று (20-04-2021) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கடந்த வாரம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின் படி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நீலகிரி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வசதிக்காக பயன்பாட்டில் இருந்து வரும் ரயில் சேவைகளை ரத்து செய்வதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு பாதியாக குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!
அதன்படி நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை செயல்பட்டு வரும் நீலகிரி ரயில் சேவை நாளை (21-04-2021) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்த போது, ‘கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது’ என அறிவித்துள்ளது.