அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இல்லை – அமைச்சர் விளக்கம்!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு இல்லை, டிவி மூலம் தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
ஜூலை 13 முதல் டிவி மூலம் வகுப்புகள்:
தமிழகத்தில் வரும் ஜூலை 13ம் தேதி முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, டிவி வாயிலாக பாடம் கற்பிக்கப்படும் எனவும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறாது என அமைச்சார் கூறியுள்ளார். ஆன்லைனில் கல்வி கற்பதற்கு தேவையான இணைய வசதி பல மாணவர்களிடம் இல்லாத காரணத்தில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது களிடம் சிந்தனை யோசனை என்னும் மூளையில் உள்ள பகுதி இல்லையா? அரசு என்பது மக்களின் அனைத்து சூழ்நிலையும் கணக்கில் கொண்டு யோசித்து முடிவுசெய்து மக்களுக்கு அளிக்க வேண்டும். அது இல்லாமல் போகிறபோக்கில் உளறிவிட்டு எல்லா மக்களையும் மனத்துண்பத்துக்கு ஆளாக்குவது அரசா?
பள்ளிகள் எப்பொழுது தொடரும்.