இனி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து நிரந்தர வேலை – AirBnB நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!

0
இனி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து நிரந்தர வேலை - AirBnB நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
இனி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து நிரந்தர வேலை - AirBnB நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
இனி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து நிரந்தர வேலை – AirBnB நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!

சுற்றுலா நடவடிக்கைகளை கையாளும் முதன்மை நிறுவனமான AirBnB, தனது 6000 ஊழியர்களை இனி வீடுகளில் இருந்தே நிரந்தரமாக வேலை (WFH) செய்யும் முறையை பின்பற்ற அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

வீட்டிலிருந்து நிரந்தர வேலை

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட AirBnB நிறுவனம் விடுமுறை வாடகை மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான ஹோம்ஸ்டேகள் உள்ளிட்ட ஆன்லைன் சந்தையை இயக்குகிறது. இந்த நிறுவனத்தில் இப்போது 6000 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்கள் இனி எப்போதும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்றும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் தங்கள் வீடுகள், அலுவலகம் அல்லது வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும் போதும், போக்குவரத்தில் இருக்கும்போது எங்கிருந்தும் நிரந்தரமாக வேலை செய்ய முடியும்.

Exams Daily Mobile App Download

வாழ்க்கை செலவு குறைந்த பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு மாற்றம் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், Airbnb தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் செஸ்கி, ஊழியர்களின் வழக்கமான சந்திப்புகள் மற்றும் பின்வாங்கல்கள் மட்டும் அலுவலகங்களில் இருந்தபடி தொடரும் என்று தெரிவித்துள்ளார். இப்போது Airbnb நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது, தொலைதூர வேலைகளுக்கு இடமளிக்கும் வகையில் பரந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் CEO கூறி இருக்கிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில், ‘மக்கள் எங்கு வேலை செய்யலாம் என்பதை தேர்வு செய்யும் வகையில் உலகம் மிகவும் நெகிழ்வாகி வருகிறது. இதை நாங்கள் எங்கள் சொந்த வியாபாரத்தில் பார்க்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில் கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பிறகு, இந்நிறுவனம் பெருகிய முறையில் பிரபலமடைந்தது என்று தெரிவித்துள்ளது. அதாவது ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே Airbnbல் முன்பதிவு செய்தவர்கள், ஏறக்குறைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தங்கியிருந்ததாக கூறியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் சுமார் 175,000 பேர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் தங்குவதற்கான முன்பதிவு செய்ய இந்த தளத்தை பயன்படுத்தியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!