தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய விதிமுறைகள் அமல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய விதிமுறைகள் அமல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புதிய விதிமுறைகள் அமல் படுத்தினால் பல சிக்கல் வரும் என்று பொது மக்கள் தெரிவித்து உள்ளனர். அதனால் அமைச்சர் சக்கரபாணி இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.

ரேஷன் கார்டு:

தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டமாக ரேஷன் கார்டு திட்டம் மாநிலத்தில் செயலில் இருந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் இருக்கும் சாமானிய பொது மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களுக்கு இன்னும் பல அருமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் பொங்கல் பண்டிகை வந்தது. அந்த பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப் பட்டது. மேலும் இவர்களின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தையும் விரைவில் கொண்டுவர இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – மே மாதத்தில் சம்பளம் அதிகரிப்பு!

இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளனர். அந்த அறிவிப்புகள் என்னவென்றால், இனிமேல் நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரேஷன் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால், தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 803 அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளில், 98 புள்ளி இரண்டு மூன்று சதவிகித அட்டைகளுக்கு கைரேகை சரி பார்ப்பின் மூலம், பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். கைரேகை மற்றும் இதர பிரச்சனைகளும் வருவதாக தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் கண் கருவிழி சரி பார்ப்பின் மூலம் செயல்படுத்தும் நடைமுறை ஏற்கனவே உள்ளது என்றும், இதனடிப்படையில், தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!