மாநில அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – மே மாதத்தில் சம்பளம் அதிகரிப்பு!
சத்தீஸ்கர் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய நிவாரணமாக அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த கூடுதல் தொகை இப்போது மே மாத சம்பளத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DA உயர்வு
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தயக்கம் காட்டி வரும் நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு OPSயை அமல்படுத்தி கவனம் ஈர்த்திருந்தது. அந்த வகையில் சத்தீஸ்கர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் இது போன்ற நடவடிக்கையை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இப்போது பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்த OPS பலனை பெற இருக்கும் வேளையில், மீண்டுமாக ஒரு ஜாக்பாட் அறிவிப்பை சத்தீஸ்கர் அரசு வெளியிட்டுள்ளது.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBI புதிய வழிகாட்டுதல்கள்! முழு விபரங்கள் இதோ!
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்தி அரசு அறிவிப்புகளை கொடுத்துள்ளது. இந்த அதிகரிக்கப்பட்ட DA தொகை ஏப்ரல் 1, 2022 முதல் செலுத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது மே மாதத்திற்கான ஊழியர்களின் சம்பளத்துடன் அவர்களின் அகவிலைப்படியும் சேர்க்கப்பட உள்ளது. இது குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி, தொழிலாளர் ஆணையாளரின் அறிவுறுத்தலின் கீழ் ஏப்ரல் 1 முதல் 2022 செப்டம்பர் 30 வரை, தினக்கூலி தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். மேலும், பணியாளர்கள் வகுப்பில் திறமையற்றவராக இருந்தால், ஆட்சியர் அலுவலகத்திற்கு மாதம் ரூ.9540 வசூலிக்கப்படும். இதனுடன் ஊதியத் தொகை மாதம் ரூ.2385 வீதம் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.