தமிழகத்தில் மளிகை கடைகளில் விற்பனை – அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!!

0
தமிழகத்தில் மளிகை கடைகளில் விற்பனை - அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!!
தமிழகத்தில் மளிகை கடைகளில் விற்பனை - அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!!
தமிழகத்தில் மளிகை கடைகளில் விற்பனை – அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் காரணமாக தற்போது ஊரடங்கு நடவடிக்கை வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

தமிழகத்தில் சுமார் 20 நாட்களாக ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வரும் சூழலில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடவடிக்கை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் மக்கள் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது குறைப்பு?தலைமை செயலாளரிடம் கோரிக்கை!!

ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் முதலியவற்றை உள்ளாட்சி துறைகளின் அனுமதியுடன் வீடு வீடாக சென்று விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதனை தொடர்ந்து மளிகை பொருட்களையும் வண்டிகளில் வைத்து விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை நேரில் சென்று விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

தற்போது இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பார்த்திபன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஆட்சியர் அவர்கள் கூறியதாவது, தினசரி 250 டன் காய்கறி, பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன் அளவு குறைந்து விடாமல் இருக்கவும், அதிக விலைக்கு விற்பனை செய்யமால் இருக்கவும் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 3 அல்லது 4 சக்கர வாகனத்தில் மட்டுமே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் – வெ.பழனிக்குமார் நியமனம்!!

இதனை தொடர்ந்து மக்களின் நலன் கருதி ருது ஆன்லைன் மற்றும் போன் மூலம் தொடர்புகொண்டு மக்கள் தங்களது தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கடை ஊழியர்கள் பொருட்களை எடுப்பதற்காக மட்டுமே கடையை திறக்க வேண்டும் என்றும் மளிகை கடைகளில் நேரிடியாக சில்லறை விற்பனை செய்ய கூடாது என்றும் இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!