அடையாளம் காணப்பட்ட பஹல்கம் தீவிரவாதி.. NIA வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கீழ் இயங்கும் தி ரெஸிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிகழ்வால் கோபமடைந்த மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், “பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளில் ஒருவரான ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் பாரா கமாண்டோவில் சிறப்புப் பிரிவான SSG-ஐ சேர்ந்தவர் முன்னாள் வீரர்” என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் ஆனது தீவிரவாதிகளுக்கு உதவியதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட 15 பேரிடம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது. மேலும், “ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பி இருக்கலாம்” என கூறப்படுகிறது.
























