பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு – சிறப்பு பயிற்சி அளிக்க புதிய திட்டம்!
தொடக்கப் பள்ளி மாணவர்களிடையே கற்றல் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சி:
தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய திட்டங்களின் வாயிலாக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களிடம் கற்றல் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சிறப்பு பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிங்க் அறக்கட்டளை மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து இப்பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்க உள்ளனர்.
இத்திட்டத்தின் தொடக்க விழா இன்று பள்ளியில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய மேயர் தினமும் ஒரு மணி நேரம் பள்ளியில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இதில் இணைய வழியில் வெளிநாட்டு பாடங்களுக்கு இணையான பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கற்ற குறைபாடு உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்வதே ஆகும் என கூறினார்.