SBI வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் வசதி அறிமுகம் – எளிய வழிமுறைகள் இதோ
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருப்பினும் நேரடியாக ஆன்லைன் வாயிலாகவே வங்கி கணக்கை திறந்து கொள்வதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வசதி அறிமுகம்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து வித அம்சங்களும் ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளும் வழிமுறைகளை ஸ்டேட் பாங்க் வழங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் பொதுமக்களிடமிருந்து பலத்த வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எஸ்பிஐ வங்கியில் யோனோ ஆப்பின் மூலமாகவே சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்குகளை திறந்து கொள்ள முடியும். இதற்கான வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முடிவுக்கு வரும் சன் டிவியின் ‘எதிர்நீச்சல்’ சீரியல்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
வழிமுறைகள்:
- முதலில் யோனோ எஸ்பிஐ செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்/
- அதில் என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஒ போன்ற விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
- இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
- இப்பொழுது ஒரு புதிய பக்கத்தில் கேஒய்சி விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.
- இப்பொழுது உங்களுக்கு அருகில் உள்ள sbi வங்கியில் தேவையான ஆவணங்களை செலுத்துவதற்கான விருப்பத்தை காண்பீர்கள்.
- அதில் உங்களுக்கு விருப்பமான கிளையை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர் வெளியுறவு அலுவலகம், நீதிமன்ற மேஜிஸ்திரேட், இந்திய தூதரகம், பிரதிநிதி அலுவலகம் அல்லது நீதிபதி ஆகியவர்களிடமிருந்து கேஒய்சி ஆவணங்களை சரிபார்த்து அவற்றை வங்கி கிளைக்கு அனுப்ப வேண்டும்.
- இதன் பின்னரான செயல்பாட்டில் உங்களுக்கு வங்கி கணக்கு திறக்கப்பட்டு இதற்கான அறிவிப்பை நீங்கள் பெறுவீர்கள்.