தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் !
தமிழக அரசின் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இன்று (10-04-2021) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்னதாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டுமாக அதிகரித்து வருகிறது. பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று (10-04-2021) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் கீழ்க்கண்டவாறு:
- திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று முதல் தடை.
- முகக்கவசம் அணிவது கட்டாயம்.
- முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
- பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- சலூன் கடை, அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்களில் 50% மட்டுமே அனுமதி.
- அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும்.
- பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் 5000 வரை அபராதம் விதிக்கப்படும்.
- அரசின் வழிகாட்டுதல் நடைமுறையை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
- தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் ஊழியர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர்.
- காய்கறி கடைகள், மளிகை கடைகள், வணிக வளாகங்கள், பெரிய ஜவுளி, நகை கடைகள், ஷோரூம்களில் 50% மட்டுமே அனுமதி.
- ஓட்டல்கள், டீக்கடைகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி.
- கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், அருங்காட்சியகங்களில் 50% பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
- சினிமா தியேட்டர்களில் 50% இருக்கைகளுடன், சமூக இடைவெளி கட்டாயம்.
- திருமண நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு 100 பேர், துக்க நிகழ்ச்சிக்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.
- வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு இரவு 8 மணி வரை அனுமதி.
- வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதனால் மக்கள் இந்த கட்டுப்பாடுகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்