ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பழனி முருகன் கோவிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று (10-04-2021) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கோவில்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும். இரவு 7 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இரவு 8 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து பக்தர்கள் கீழே இறங்கி வர வேண்டும். கோவிலில் எந்தவொரு பக்தர்களும் அமர்வதற்கு அனுமதி இல்லை.
உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை!!
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே பழனி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவிலுக்குள் அசுத்தம் செய்வதோ எச்சில் உமிழ்வதோ கூடாது. இரவு 7 மணிக்கு மேல் மின் இழுவை ரயில், ரோப்கார் சேவைகள் இருக்காது’ என கூறப்பட்டிருந்தது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்