ATM ல் பணம் எடுப்பதில் புதிய விதிமுறை – SBI அறிவிப்பு!
பாரத ஸ்டேட் வங்கி தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ATM ல் பணம்:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் பாதுகாப்பை உறுதி செய்யவும், பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது உங்களது கடவு சொல்லை பதிவு செய்துவிட்டாலே ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது அதில் சில மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வாடிக்கையாளர்கள் ATMகளில் இருந்து பணம் எடுக்க விரும்பினால் உங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படுகிறது. அந்த OTP எண்ணை பதிவு செய்தால் மட்டுமே வாடிக்கையாளர் ATM ல் இருந்து பணத்தை எடுக்க முடியும். இந்த புதிய விதிமுறையின் படி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என பொதுக் கடன் வழங்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 27ம் தேதி ‘இந்த’ மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
மேலும், இந்த புதிய விதிமுறை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அங்கீகரிக்கப்படாத ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதில் இருந்து பாதுகாக்கும். மேலும், வாடிக்கையாளர் 24 மணி நேரமும் OTPகளை பதிவு செய்து ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் வங்கியின் அனைத்து ஏடிஎம்களிலும் வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த புதிய விதிமுறை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்