தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் பிரச்சனை தீர்க்க சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
மாநகராட்சி அதிரடி நடவடிக்கை:
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே செப்டம்பர் மாதம் அதிகரிக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த இரண்டு விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 16 சிறப்பு வாகனங்களில் ஐந்து தொழிலாளர்கள் உட்பட தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்களை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.
Indigo நிறுவனத்தில் Executive ஆக பணிபுரிய வாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்!
அதன் படி, 2022-23 அறிவிக்க பயன்படும் சுமார் 7,018 கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாளுக்கு நாள் தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்கள் பிரச்சினை கடுமையாக மாறி வருவதால் நாய்களால் கடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக உணவளிப்பதில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர சென்னை மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் பல திட்டங்களை தற்போது செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.