மே 1 வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல் 22) முதல் அமலுக்கு வரவுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
கொரோனா பரவலின் இரண்டாம் அலையை முழு நாடும் எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் இரவு நேர கட்டுப்பாடுகள், பொது முடக்கம் என அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோய் பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்ப்பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளாக மேலும் சில கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதன்படி தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மே மாதம் 1 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அதன் படி,
இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா – 2104 பேர் பலி!!
- திருமண நிகழ்ச்சிகளுக்கு 25 பேர் அனுமதியுடன் 2 மணி நேரம் மட்டுமே நடைபெறவேண்டும்.
- மருத்துவமனை, இறப்பு காரியங்கள் நிமித்தமாக மட்டுமே பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
- பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க தடை.
- ரேஷன், மளிகை கடை, காய்கறி கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்க அனுமதி.
- அரசு அலுவலகங்களில் பணிக்கு 15% பேர் மட்டுமே அனுமதி.
- தனியார் நிறுவனங்களிலும் WORK FROM HOME நடைமுறை.
உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடர்ந்து இந்த வழிமுறைகளை கடைபிடிக்காமல் அதை மீறுபவர்களுக்கு 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மஹாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.