இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா – 2104 பேர் பலி!!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு நாளில் மட்டும் 3.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல பலி எண்ணிக்கையும் சற்று உயர்ந்து வருகிறது. இந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பல மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது. கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை ஆகிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, நேற்று ஒரே நாளில் 3,14,835 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டடம் – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!
தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 2,104 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 1,78,841 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,34,54,880 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 22,91,428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 13,23,30,644 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.