தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு – அமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மாணவர்களின் நலன், கற்றல் ஆகியவற்றிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
புதிய ஏற்பாடு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதாவது, கிட்டத்தட்ட இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அனைத்து ஆசிரியர் சங்கங்களுடன் 20 மணி நேரத்திற்கும் மேலே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கிட்டத்தட்ட 147 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அந்தக் கோரிக்கைகளில் 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டிலிருந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும்படியாக அவர்களை உரக்கச் சொல்லி படிக்க சொல்ல வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் குறைந்தது தக்காளி விலை.. கிலோ ரூ. 80 க்கு விற்பனை – பொதுமக்களுக்கு நிம்மதி!
மேலும், ஒரு சில அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில சொற்களை படிக்க முடியாமல் திணறுவதால் ஆங்கிலத்தை உரக்கச் படிக்க சொல்லித் தர வேண்டும் எனவும், சரியாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க கற்றுத் தர வேண்டும் எனவும், கற்றல் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கற்றல், கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.