தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் – இதை உடனே பாருங்க!
மீண்டும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தபட்டுள்ளதால் பொதுமக்கள் இன்று முதல் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகைத்திட்டம் வரும் செப். 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது, 3 கட்டங்களாக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போதைக்கு முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இருக்கிறது.
மேலும், ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது குடும்பத் தலைவிகளின் விரல் ரேகை பதிவுடன், அனைத்து விவரங்களும் கணினி மூலமாகவே பதிவு செய்யப்படுகிறது. இதனால், ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த பயோமெட்ரிக் கருவிகள் அனைத்தும் முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கையெழுத்திட்டு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதனால், குடும்பத் தலைவிகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்பதனால் சற்று சிரமத்தினை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், ரூ. 1000 உரிமைத்தொகைக்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் மீண்டும் அந்த பயோமெட்ரிக் கருவிகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் இன்று முதல் எந்த நியாய விலை கடைகளின் மூலமாகவும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.