தமிழகத்தில் 5 புதிய ஆதி திராவிடர் நல விடுதி – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக நல விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கூடுதலாக 5 விடுதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர்கள் நல விடுதி:
தமிழகத்தில் அரசு ஆதி திராவிடர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அத்துடன் இலவச கல்வி மற்றும் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலான உதவித்தொகை போன்றவை மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆதிதிராவிடர் இன மாணவர் தங்கி பயில வசதியாக மாவட்டங்கள் தோறும் நல விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்த விடுதிகளை பயன்படுத்தலாம். இதில் சேர அந்த கல்வி நிறுவனங்கள் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
EPFO அமைப்பிற்கு நியமிக்கப்பட உள்ள 35 சட்ட நிபுணர்கள் – நிலுவை வழக்குகளின் எதிரொலி!
Follow our Instagram for more Latest Updates
ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு 5 புதிய கட்டிடங்கள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வாடகை விடுதி மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வரும் 5 கல்லூரி மனவர்களுக்கான விடுதிகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக அரசு ரூ. 27.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.