ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 25/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஒருங்கிணைந்த சேவை மையம் |
பணியின் பெயர் | வழக்கு ஆலோசகர் |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25/11/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கள்ளக்குறிச்சி மாவட்ட காலிப்பணியிடங்கள்:
வழக்கு ஆலோசகர் – 3 பணியிடம்
ஆலோசகர் கல்வி தகுதி:
- இளங்கலை சட்டப்படிப்பு / சமூகப்பணி / சமூகவியல் / சமுக அறிவியல் / உளவியல் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
- மேலும் அரசு அல்லது அரசு சாரா திட்டத்தில் பெண்கள் தொடர்புடைய பணியில் குறைந்த பட்சம் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் உள்ளுரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
கள்ளக்குறிச்சி மாவட்ட சம்பள விவரம்:
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மறு வாழ்வு அளித்தல் சம்மந்தமான ஒப்பந்தப் பணி, இதற்கான மாத ஒப்பந்த ஊதியம் ரூ.15,000/- வழங்கப்பட உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Case Worker பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் 25-11-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.