+2 பொதுத்தேர்வில் புதிய ட்விஸ்ட்.. பிட் அடிப்பதை தடுக்க சூப்பர் ஏற்பாடு!!
பொதுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு தேர்வு அறைகளில் இருந்து நேரலை செய்ய முடிவெடுத்துள்ளது.
பொதுத்தேர்வு:
அரையாண்டுத்தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மாணவர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். மேலும், அரையாண்டுத்தேர்வை தொடர்ந்து சில மாதங்களிலேயே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரவிருப்பதால் மாணவர்கள் பயத்தில் உள்ளனர். மேலும், பள்ளிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை வருவதனாலும் பாடத்திட்டங்களை சரிவர முடிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கான பதிவு கட்டணம் குறைப்பு – இன்று முதல் அமல்!!
மேலும், பொதுத்தேர்வின் போது நடைபெறும் முறைகேட்டை தடுக்க அனைத்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு விடுகின்றனர். இதை தடுக்கும் விதமாக ஒடிசா மாநிலத்தில் தேர்வு அறையில் சிசிடிவி பொருத்தப்பட்டு கடுமையாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஆனாலும், சில முறைகேடுகள் நடைபெறுகிறது என்பதால் பொதுத்தேர்வின் போது நேரலை செய்ய ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.