தமிழகத்தில் இத்தனை லட்சம் போ் விண்ணப்பப் பதிவு – அதிர்ச்சி அளிக்கும் NTA ரிப்போர்ட் !

0

தமிழகத்தில் இத்தனை லட்சம் போ் விண்ணப்பப் பதிவு – அதிர்ச்சி அளிக்கும் NTA ரிப்போர்ட் !

வரும் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இதுவரை 1.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி1ல் தொடங்கி மார்ச் 16ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நாட்களில் நாடு முழுவதும் சுமார் 23,81,833 பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்தேவை – சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை

அவர்களில் 10,18,593 பேர் ஆண்கள் 13, 63,216 பெண்கள் 24 பேர் திருநங்கைகள். இந்த ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3,39,125 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை மட்டும் மொத்தம் 1,55,817 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு 11 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும் ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் இந்த தேர்வை தடை செய்ய வாய்ப்பு இல்லை என்பது தெரிய வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!