நாடு முழுவதும் நீட் தேர்வு தேதியில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், தேதியை மாற்றியமைக்க வேண்டும் என முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வு வரும் மே 7 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் இளங்கலை நீட் தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், நீட் தேர்விற்கு இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் பலரும் நீட் தேர்வுக்கு விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றன.
திருமணம் செய்தால் ரூ. 51,000 உதவித்தொகை.. மாநில அரசின் சூப்பர் திட்டம் இது!
மேலும், தமிழகத்தில் ஏற்கனவே 12 வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முடிவு மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வு மே 7ஆம் தேதி வெளியாக இருப்பதால் மே 8 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு நடக்க இருக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜம்மு காஷ்மீரில் மே 3 ஆம் தேதி மாணவர்களுக்கு புவியியல் தேர்வு நடைபெற இருப்பதால் மே 7 ஆம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்விற்கு அவர்களால் சரியாக தயாராக முடியாது. அது மட்டும் அல்லாமல் மே 6 மற்றும் 8 ஆம் தேதிகளிலும் மாணவர்களுக்கு தேர்வு இருக்கிறது. இதன் காரணத்தினால் குறைந்தது தேர்வு முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.