மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் – ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த திட்டம்!!
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை தேசிய தேர்வு முகமை மூலமாக நடத்தப்படுகின்றன. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் வருடத்தில் 4 முறை நடைபெறும் என தெரிவிக்கபட்டது.
TN Job “FB Group” Join Now
எனவே நீட் தேர்வுகளையும் ஆண்டுக்கு 2 முறை ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை மருத்துவ கல்வி அலுவலகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இது அமலுக்கு வராத நிலையில், வழக்கமான முறையிலேயே தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தேர்வுகள் முகமை இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி!!
2021 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நீட் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுகளுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும். முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் மாற்றம் வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.