10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி!!
கேரளாவில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தேர்தல் காரணமாக ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் தேர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து கடிதத்தை தலைமை அதிகாரிக்கு தேர்தல் அலுவலர் அனுப்பி வைத்தார்.
‘கற்போம் எழுதுவோம்’ திட்ட தேர்வுகள் – மார்ச் 27 முதல் தொடக்கம்!!
இதனை பரிசீலனை செய்த தேர்தல் அலுவலகம் கேரளாவில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகளை ஒத்திவைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.