நீட் தேர்வில் முறைகேடு ??? – காவல் துறை அறிவிப்பு
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட தமிழக மாணவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது ஆள்மாறாட்டம் செய்து அவர்களுக்கு உதவிய 8 வடமாநில மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
இந்த முறைகேடு விசாரணையில் சிபிசிஐடி போலீசார் தேனி மருத்துவ கல்லூரியில் படித்த சென்னை மாணவர் உட்பட 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவிய வடமாநில மாணவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு சிபிசிஐடி போலீசார் அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 94438-84395 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்து உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்