தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2021 – ஜனவரி 31 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!!!
வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை இந்த ஆண்டிற்கான இரண்டாவது தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2021 அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி 31 வரை வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
தேசிய ஸ்டார்ட் அப் விருது 2021:
கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மேற்கொண்ட மிக சிறந்த நடவடிக்கைகள், முன்முயற்சிகள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றன. சுயசார்பு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த வருடம் முக்கியத்துவம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, குடிநீர், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட 15 துறைகளில் 49 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். கூடுதலாக கல்வி நிறுவனங்கள், கொரோனா தொற்றுக்கு எதிரான கண்டுபிடிப்புகள் போன்றவற்றிற்கு 6 பிரிவுகளில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் நான்கு கட்ட போராட்டம்- அரசு ஊழியர் சங்கம் அறிக்கை!!!
வெற்றியாளர்களுக்கும், இரண்டாம் இடம் வகிக்கும் இரண்டு பேருக்கும் தங்களது கண்டுபிடிப்பை தகுந்த அதிகாரிகள் மற்றும் பெரு நிறுவனங்களின் முன் செயல் விளக்கம் அளித்து அதன்மூலம் புதிய வாய்ப்புகளை அவர்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். வெற்றி பெருபவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.விருதுகளுக்கான விண்ணப்பமுறை குறித்து http://www.startupindia.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்