10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் வேலைவாய்ப்பு!!
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் சார்பாக செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் தேசிய விண்வெளி ஆய்வகத்தின் பிட்டர் பணிக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம்:
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) என்பது இந்தியர்கள் தங்கள் துறையில் பயிற்சி பெறுவதை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய திட்டமாகும். தொழிற்துறையில் பணிக்கான அடிப்படை பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் செயல்முறை பயிற்சி போன்ற பயிற்சிகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
ரூ.39 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!!
காலிப்பணி இடங்கள்:
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகங்கள் துறையில் ஃபிட்டர் காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வக துறையில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்வெளி ஆய்வகத்தில் மொத்தம் 29 ஃபிட்டர் பதவிக்கான காலிப்பணி இடங்கள் உள்ளது. பெங்களூர் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பணி இடங்கள் அமைக்கப்படும். இப்பணிக்கு ரூ.6,000 முதல் ரூ.8,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 10ம் வகுப்பு படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பயிற்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்