ரூ.39 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!!
இந்திய வருமான வரித்துறை நிறுவனத்தில் இணை ஆணையர் பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை:
வருமான வரித்துறை இந்திய அரசாங்கத்தின் நேரடி வரி வசூலை மேற்கொள்ளும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்த துறை மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது. மத்திய நேரடி வரித்துறையின் தலைமை அலுவலகமாக வருமான வரித்துறை செயல்படுகிறது. வருமான வரிச்சட்டத்தின் படி, அனைத்து நிறுவனங்களும் தங்களின் வருமான வரியை செலுத்துவதை வருமான வரித்துறை கண்காணிக்கிறது.
என்.டி.பி.சி நிறுவனத்தில் பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் – மகளிர் தின சிறப்பு ஏற்பாடுகள்!!
வேலைவாய்ப்பு:
வருமான வரித்துறையின் இணை ஆணையர் (குரூப் A) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக மும்பை அலுவகத்தின் அதிகாரபூர்வ அதிகாரி சார்பாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இணை ஆணையர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 8ம் தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இணை ஆணையர் பணிக்கு ரூ.39,100 மாத ஊதியமாக வழங்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்